மாவனெல்லை - மா ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மா ஓயாவில் இன்று பிற்பகல் 07 பேர் நீராடச்சென்றுள்ள நிலையில், அவர்களில் இருவர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்கள் மாவனெல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலங்களை பிரேத பரிசோதனைகளுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, ஆறு மற்றும் குளங்களில் நீராடச் செல்லும் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.