பசறை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும் பதுளை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் வின்சன் பெர்ணாண்டோ பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக வைத்தியர் தம்பதியினர் இந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இருந்தபோதிலும், குறித்த குழந்தைகளின் பாட்டி குழந்தைகளை வைத்தியர் தம்பதியினரிடம் ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் பதுளை மாவட்ட கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் குறித்த 03 பிள்ளைகளையும் நேற்று (27) பொறுப்பேற்றுள்ளார்.
இக்குடும்பத்திற்கான அத்தியாவசிய தேவைகள் பதுளை மறைமாவட்ட ஆயரின் ஆதரவில் லுணுகல புனித லூர்து அன்னை ஆலய பங்குதந்தையூடாக முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி இப்பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் முழு கவனமும் ஆயரினால் கண்காணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.