ஹல்துமுல்ல கலப்பான பகுதியில் பம்பரகந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்த 11 பேரும் கண்டுபிடிக்கட்டுள்ளனர்.
கொழும்பு கல்கிசை பகுதியில் இருந்து வருகைதந்த குறித்த பதினொரு பேரும் இன்று (28) முற்பகல் குறித்த பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில், பிரதேச பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் குறித்த 11 பேரும் மீட்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
வழிதவறி காட்டுப்பகுதியில் சிக்குண்டிருந்த நிலையில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.