தபால் மூலம் இலங்கை வந்த போதைப் பொருள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தபால் மூலம் இலங்கை வந்த போதைப் பொருள்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்த பொதி ஒன்றை பரிசோதனை செய்த போது 27 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல், பிரான்ஸிலிருந்து டுபாய் ஊடாக இலங்கை வந்த பொதி ஒன்றை சோதனை செய்த போதும் 4,360 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் டிசம்பர் 27ஆம் திகதி இலங்கைக்கு இவை அனுப்பப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பொதிகளும் போலியான முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற பொதிகள் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன்,புதிய வகை போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதை தடுக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.