கொரோனா ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் வடக்கில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் வடக்கில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கொரோனாவால் ஜனாஸாக்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் இன்று (03) போராட்டங்களை நடத்த உள்ளனர்.

எதிர்ப்பு பேரணி ஒன்றை அவர்கள் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரணைதீவு என்பது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். 108 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றனர்.

இதேவேளை இரணைதீவில் வசிப்பவர்கள் யாரும் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.