இறக்குமதி செய்து சுத்தப்படுத்தாத தேங்காய் எண்ணெய் 8,300 மெட்றிக் டொன் கொழும்பு துறைமுகத்திலிருந்து நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தும் பெருந்தொகையில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொண்டுவரப்பட்ட 13 கன்டேனர்கள் துறைமுகத்தின் ஊடாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு சந்தைக்கு விடப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே மேலும் 8,300 மெட்றிக் டொன் தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விற்பனைக்காக விடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.