பொத்துவில் காட்டுக்குள் 30 வருடத்திற்கு மேலாக விவசாயம் செய்யும் முஸ்லிம் விவசாயிக்கு சொந்தமான இடம் தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
சட்ட விரோதமான முறையில் காணியை குறித்த விவசாயி அபகரித்ததனால் தேரர்கள் அப்பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதாக தேரர்கள் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் பாதிகப்பட்ட முஸ்லிம் விவசாயி ஆதங்கப்படும் காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயி தொடர்பில் மேலதிக தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.