ஈஸ்டர் தாக்குதலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புர்காவினை தடை செய்வது மற்றும் 11 தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது போன்ற நடவடிக்கைகள் விரைவில் செயற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை குறித்த பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்றபோது அமைச்சர் வீரசேகர இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
புர்காவினை தடை செய்வது மற்றும் 11 தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது போன்ற நடவடிக்கைகள் விரைவில் செயற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை குறித்த பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்றபோது அமைச்சர் வீரசேகர இந்த கருத்துக்களை தெரிவித்தார்.