நாட்டில் இன்றைய தினம் 05 கொரோனா மரணங்கள் பதிவாகின.
எதுல்கோட்டை பகுதியை சேர்ந்த 70 வயது ஆணொருவர், கந்தானை பகுதியை சேர்ந்த 63 வயது ஆணொருவர், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 45 வயது ஆணொருவர், களுத்துறை தெற்கு பகுதியை 55 வயது ஆணொருவர் மற்றும் கொழும்பு 13ஐ சேர்ந்த 67 வயது ஆணொருவருமே இவ்வாறு பலியாகினர்.
அதன்படி இலங்கையில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 566 ஆக உயர்வடைந்துள்ளது.