ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தாக்குதலை மேற்கொண்டவர்களிற்கான தண்டனைகளை தீர்மானிப்பதற்கான அதிகாரமில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது; கூடிய விரைவில் பொதுஜன பெரமுன தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் நிலைப்பாட்டிற்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் வேறுபாடுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவிற்கு நீதித்துறை அதிகாரங்கள் இல்லாததால் அது தண்டனைகளை பரிந்துரை செய்ய முடியாது. ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை சுமத்துவார்; நீதிமன்றமே தண்டனைகளை தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
$ads={1}
குறிப்பிட்ட அறிக்கையின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களமும் சிஐடியினரும் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளன என தெரிவித்துள்ள கல்வியமைச்சர் அறிக்கை முழுமையானதில்லை ஆனால் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.