கொரொனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது.
இதனடிப்படையில், நேற்று (13) வரை 45 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவையனைத்தும் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி பிரதேசத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன. இவற்றுக்குத் தேவையான உதவிகளை இராணுவத்தினர் செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.