கடையில் கடன் பெற்ற கொப்பியை அழிக்க கடைக்கே தீ வைத்த நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடையில் கடன் பெற்ற கொப்பியை அழிக்க கடைக்கே தீ வைத்த நபர் கைது!


களுத்துறை, தர்கா நகர் பகுதியில் கடைக்கு தீ வைத்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்தள்ளனர்.


யடடொல வீதியில் உள்ள ஆதிகரிகொட பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நேற்று (10) அதிகாலை தீ வைக்கப்பட்டது. நேற்று மாலை சந்தேகபர் கைதானார்.


எரிவாயு சிலிண்டர்கள் தீப்பற்றியதால் வர்த்தக நிலையத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பொலிசார், பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.


வர்த்தகருக்கு சுமார் 2.5 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டது.


கடையின் பின்பகுதியில் ரோர்ச் லைட், தீப்பெட்டி என்பன மீட்கப்பட்டன. அதை தடயப்பொருளாக வைத்து பொலிஸார் சோதனையிட்டனர். பொலிஸ் மோப்பநாய் மூலம், அந்த பகுதியில் வசிக்கும் 35 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.


$ads={1}


கடைக்கு தீ வைத்த குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்டார்.


கடையிலிருந்து பொருட்களை கடன் வாங்குவதாகவும், அந்த தொகை அதிகரித்து விட்டதால், பணத்தை செலுத்த முடியாத நிலையில், கடன் கொப்பியை அழிக்கும் நோக்கத்துடன் கடைக்கு தீ வைத்ததாக தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.