நவீன இயந்திரங்களுடன் புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் கைது! கண்டி, மாத்தளை, கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நவீன இயந்திரங்களுடன் புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் கைது! கண்டி, மாத்தளை, கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள்!


கிளிநொச்சி - வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் அமைந்திருந்த காட்டுப் பகுதிக்கருகில் புதையல் தோண்ட முற்பட்ட வேளை ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இராதநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் காட்டுப் பகுதியில் நவீன ஸ்கேனிங் இயந்திரத்துடன் மாத்தளை, கண்டி மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த ஐவர் கடந்த 29 ஆம் திகதி புதையல் தோண்டுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் தகவல் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு ஐவரும் கைது செய்யப்பட்டனர். 


இவர்களில் ஒருவர்  பூசை வழிபாடுகளுக்காக அழைத்து செல்லப்பட்ட முதியவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் நவீன ஸ்கேனிங் கருவி ஒன்றும் மற்றும் ஏனைய பொருட்கள், அவர்கள் பயணித்த மோட்டார் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் இவர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஐவரையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.