மஹிந்த ராஜபக்ச நெலும் பொகுன மண்டபத்திற்கு முன்னால் விஹாரமாதேவி பூங்காவில் இன்று (19) அமைக்கப்பட்டிருந்த சூழல் நட்பு சுவரோவியத்தினை சுற்றுச் சூழல் பொலிசார் அகற்றியுள்ளனர்.
சர்வதேச காலநிலை நடவடிக்கைக்கான தினத்தினை முன்னிட்டு வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கய்தின் இளைஞர் பிரிவு குறித்த ஓவியத்தினை வரைந்து காட்சிப்ப்டுத்தினர்.
இது வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் இளைஞர் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய காலநிலை விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
இலங்கை முழுவதும் முன்னோடியில்லாத வகையில் சுற்றுச்சூழல் பேரழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கொழும்பு நகர சபையின் ஒப்புதல் பெற்ற பின்னரே, வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் இளைஞர் பிரிவு அந்த இடத்தில் சுவரோவியங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்திருந்தது.
இருப்பினும், சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவின் தலைவர் சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்று, இவ்வோவியங்கள் அனுமதியின்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி சுவரோவியத்தை அகற்றியதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு சுவரோவியத்தை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுத்தது.
இது வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் இளைஞர் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய காலநிலை விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
இலங்கை முழுவதும் முன்னோடியில்லாத வகையில் சுற்றுச்சூழல் பேரழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கொழும்பு நகர சபையின் ஒப்புதல் பெற்ற பின்னரே, வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் இளைஞர் பிரிவு அந்த இடத்தில் சுவரோவியங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்திருந்தது.
இருப்பினும், சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவின் தலைவர் சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்று, இவ்வோவியங்கள் அனுமதியின்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி சுவரோவியத்தை அகற்றியதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு சுவரோவியத்தை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுத்தது.