பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (02) இடம்பெற்ற “SKILLS SRI LANKA” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பரீட்சைகளில் சித்தியடையத் தவறும் மாணவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாவதன் காரணமாக அவர்களின் திறமைகளுக்கு உரிய இடம் கிடைக்காத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், பரீட்சைகளில், சித்தியடடைந்தவர்களாக இருந்தாலும் சித்தியடையாத மாணவர்களாக இருந்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலர் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இந்த நிலை தொடர்பில் அறிந்து தொழில் கல்விக்கான சீர்திருத்தங்களை முன்வைத்து செயற்படுத்திவருவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், ‘வாழ்க்கைக்கு ஒரு திறன் – திறனுக்கான வேலைவாய்ப்பு’ என்ற எண்ணக்கருவிற்கமைய, தாம் திறமைக்கு முன்னுரிமை வழங்கியதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டின் தொழில் கல்வியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.