பொலிஸ் உத்தியோகத்தர் லொறி சாரதியை தாக்கிய விவகாரம்! வெளியான மேலதிக தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் உத்தியோகத்தர் லொறி சாரதியை தாக்கிய விவகாரம்! வெளியான மேலதிக தகவல்!


பன்னிப்பிட்டியவில் லொறி சாரதி ஒருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோக்கத்தரை சேவையிலிருந்து இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

இதேவேளை, பன்னிப்பிட்டியவில் லொறி சாரதி ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரினால் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பன்னிப்பிட்டியவில் லொறி சாரதி ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் இன்று காலை தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.

மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரே அவர் என, விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், லொறி சாரதியை தாக்கிய குறித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸார் தமது சீருடையுடன் கடமையில் இருக்கும் போது இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.