எமது நாட்டிற்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதால் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நம் நாட்டில் உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க கவலை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் மீது அன்பும் மரியாதையும் இல்லாதவர்களே இது போன்ற சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள்.
ஒரு நாடு நமக்கு எதிராக செயல்படும்போது, நாட்டு மக்கள் அதற்கு எதிராக நிற்க வேண்டும். உண்மையான இலங்கையர் என்றால் அதுதான்.
ஜெனீவா போன்ற ஒரு ஆணையம் நம்மை தோற்கடிக்கும் போது நாம் மகிழ்ச்சியாக இருந்தால், அவர்கள் இந்த நாட்டின் குடிமக்களா என்பது சந்தேகமே. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்த நாட்டிற்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால், அனைவரும் அதற்கு எதிராக ஒன்றாக நிற்க வேண்டும் என்றார்.