இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது எமது நாட்டுக்கு மிக்க சந்தோசம் அளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்,
“மனிதவுரிமை பேரவையின் முதன்மையான விதிகளுக்கு அப்பாற்பட்டு, செயற்படுவதற்கு பேரவைக்கு முடியாது. மனித உரிமை பேரவையின் பிரதான கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு அதனால் செயற்பட முடியாது.
ஒரு நாட்டுக்கு எதிராக தீர்மானங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது பேரவையின் சட்டங்களுக்கு அப்பாற் செயற்படுத்த முடியாது. ஒரு நாட்டை முழுமையாக கடந்து தீர்மானங்கள் மேற்கொள்ள முடியாது.
அதன்படி ஐ .நாவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள அவர்களால் முடியாது போயுள்ளது. இதேவேளை, ஏதேனும் மனித உரிமைகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட ஆணைக்குழு ஊடாக ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்.
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள குறித்த ஆணைக்குழு தொடர்ந்தும் செயற்படும். ஐக்கிய நாடுகளிள் பேரவையினால் கொண்டுவரப்பட்டுள்ள 2030 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை மையமாக கொண்டு நாட்டில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.