தேய்ந்த வாகன டயர்களுடன் செலுத்தும் சாரதிகளுக்கு புதிய டயர்களை பொருத்த நிவாரண காலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேய்ந்த வாகன டயர்களுடன் செலுத்தும் சாரதிகளுக்கு புதிய டயர்களை பொருத்த நிவாரண காலம்!


தேய்ந்த டயர்களையுடைய வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அதற்கு பதிலாக புதிய டயர்களை பொருத்துவதற்கான நிவாரண காலம் சாரதிகளுக்கு வழங்கவும் பொலிசார் தீர்மானித்துள்ளனர். 


வியாபார நிலையங்களில் டயர் தட்டுப்பாடு காணப்படுவதனால் அந்தந்த வாகனங்களுக்குப் பொருத்தமான டயர்கள் வியாபார நிலையங்களில் இல்லை என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள பலர் தெரிவித்துள்ளனர். 


தேவையான டயர்கள் வியாபார நிலையங்களுக்கு வந்தடைந்ததன் பின்னர் இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு அகில இலங்கை சாரதி பயிற்சிப் பாடசாலை உரிமையாளர்களின் தேசிய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 


பயணிகள் போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட சாரதிகளின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு இந்த டயர்களை மாற்றுவதற்கு நிவாரண காலத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.