நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு மேலுமொரு மரணம் பதிவாகியது.
யாழ். நல்லூர் பகுதியை சேர்ந்த 63 வயது பெண்ணொருவர் இவ்வாறு பலியாகினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காது நேற்று (22) மரணித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிர் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 552 ஆக பதிவாகியது.