ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் சீன ஜனாதிபதி! முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் சீன ஜனாதிபதி! முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை!

china and sri lanka presidents

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த தொலைபேசி உரையாடலின் போது இரு தலைவர்களும் முக்கியமான விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.


சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியாவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி சீன கம்யுனிஸ்ட் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளை பாராட்டியுள்ளார்.


சீன ஜனாதிபதியின் தலைமையின் கீழ் சீனா பொருளாதார அபிவிருத்தி மற்றும் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது என இலங்கை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.


இலங்கைக்கான சீனாவின் பெறுமதிமிக்க ஆதரவை இலங்கை பாராட்டுகின்றது என தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி முக்கியமான விவகாரங்களில் பரஸ்பரம் ஒருவரின் நிலைப்பாட்டிற்கு மற்றவரின் உறுதியான ஆதரவை வழங்குவதற்காக இலங்கை இணைந்து செயற்பட தயாராகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.