புத்தர் சிலை சேதப்படுத்தல் விவகாரம்; மனைவியின் துன்புறுத்தல் தாங்கமுடியவில்லை! இந்திய நபர் நீதிமன்றில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தர் சிலை சேதப்படுத்தல் விவகாரம்; மனைவியின் துன்புறுத்தல் தாங்கமுடியவில்லை! இந்திய நபர் நீதிமன்றில்!


குளியாப்பிட்டி - ரத்மலவத்தையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய இந்தியரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டி நீதிவான் ஜனனி சசிகலா விஜெதுங்க நேற்று (19) உத்தரவிட்டார்.


சந்தேக நபர் இந்தியாவின் கேரளாவின் பரக்கலில் வசிக்கும் புன்னி கஞ்சரிஷ்ணன் நாயர் திலிப்குமார் என அடையாளம் காணப்பட்டார்.


குளியாப்பிட்டி, ரத்மலவத்தையில் பெண்ணொருவரை திருமணம் செய்து தற்காலிக விசாவில் வசித்து வருகிறார். சந்தேக நபர் சுமார் 16 ஆண்டுகளாக இலங்கையில் வசித்து வந்தார்.


சம்பவதினத்திலன்று, சட்டவிரோதமாக விகாரைக்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


அந்த நபர் அடிக்கடி குடிபோதையில் இருந்ததாகவும், அவரது மனைவியுடன் சண்டையிட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர். நான்கு தலைகள் கொண்ட சிரச புத்தர் சிலை உடைக்கப்பட்டதன் காரணத்தை கண்டுபிடிக்க வேண்டுமென்பதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு பொலிசார் கோரினர்.


சந்தேக நபரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது வாடிக்கையாளர் குடிப்பழக்கமுடையவர் என்றும், தனது மனைவியின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் இரவில் விகாரையில் தங்குவதாகவும், மதுபோதையில் அவர் ஏதேனும் அறியாமல் நடந்ததா என்பதை யோசித்து வருவதாகவும் கூறினார்.


எனினும், பிணைக் கோரிக்கையை நிராகரித்த நீதிவான் சந்தேகநபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டா்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.