கடந்த 01ஆம் திகதி கொழும்பு டாம் வீதியில் காணப்பட்ட சூட்கேஸ் ஒன்றினுள் இருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் குருவிட பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், சூட்கேஸை எடுத்து வந்த சந்தேக நபர் புத்தல பொலிஸ் நிலைய உப பொலிஸ் அதிகாரி (Sub Inspector) என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியை கைது செய்ய தீவிர தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Updated
52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது படல்கும்புற வீட்டில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
குருவிட்ட - தெப்பாகம பகுதி யுவதி ஒருவருடன் காதல் தொடர்பு இவருக்கு இருந்ததாகவும், நேற்று முன்தினம் ஹங்வெல்ல பகுதி ஹோட்டலுக்கு இந்த யுவதியை அழைத்த இவர் அங்கு யுவதியை படுகொலை செய்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யுவதியின் தலையை வீசிவிட்டு உடலை மட்டும் கொழும்புக்கு எடுத்துவந்த இந்த நபர், தஙகியிருந்த ஹோட்டலின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த விடயத்தை வெளியில் கூறினால் கொலை செய்வதாக எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும் தலைமறைவான இவரை தேடி விசேட பொலிஸ் குழுக்கள் விரைந்துள்ளன.
தாம் பெரிய தவறொன்றை செய்துவிட்டதாகவும் பொலிஸ் தன்னை நெருங்கினால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கூறி இவர் எழுதிய கடிதமொன்றும் அவரது வீட்டில் இருந்து சிக்கியுள்ளது.