ஹட்டனில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹட்டனில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் பொலிஸ் பிரிவிலுள்ள ஸ்டெடன் தோட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் நேற்று (05) கண்டெடுத்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் - ரொசல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதைக்குக் கீழாக தேயிலைத் தோட்டத்தில் காணப்பட்ட இச்சடலம் குறித்து தோட்டத் தொழிலாளர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரஸ்தாப நபர் 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் பிறவுண் நிற சேர்ட்டும் சாரமும் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

$ads={1}

ஹட்டன் நீதிமன்றத்தால் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பின் டிக்கோயா ஆதார மருத்துவமனையின் சிறப்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் குறித்த சடலம் அனுப்பப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

-சி.எல்.சிசில்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.