கத்தார் ஏர்வேஸ் தனது பயணிகளுக்கான RT-PCR பரிசோதனை அறிக்கை தேவையை புதுப்பித்துள்ளது. அதனடிப்படையில் 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கடந்த மார்ச் 16ஆம் திகதி அமுலுக்கு வரும்வகையில் பிசிஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கத்தார் ஏர்வேஸில் கத்தாருக்கு பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் RT- PCR பரிசோதனை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டியிய தேவை இருந்தது. இந்நிலையிலேயே குறிப்பிட்ட 13 நாடுகளில் இருந்து கத்தாருக்கு பயணிப்போருக்கு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
அதுதவிர, பயணம் செய்யும் நாடுகளின் அரசாங்க ஒழுங்குமுறையும் தொடர்ந்து பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை, ஆர்மீனியா, பங்களாதேஷ், பிரேசில், இந்தியா, இரான், இராக், நேபால், நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, தன்சானியா போன்ற நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-எம்.எம். அஹ்மத்