மூன்று ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிட்ட மூவர் அதிரடியாக கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூன்று ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிட்ட மூவர் அதிரடியாக கைது!

கொழும்பில் விசேட அதிரடிப்படையினர் , குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சுற்றிவளைப்புக்களில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு , ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்புக்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்ததாவது,

விசேட அதிரடிப்படையினரால் பாணம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 3 ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதால் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தப்பிச் சென்றுள்ள குறித்த சந்தேகநபர்கள் வசித்த இடத்திலிருந்து 5 தொலைபேசிகள் , 5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் உள்நாட்டு துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பேலியகொடை - நுகேபார பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 205 கிராம் ஹெரோயின் , 306 கிராம் கஞ்சா, 48 000 ரூபா பணம் என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.