ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக ஹிதாயத் சத்தார் நியமனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக ஹிதாயத் சத்தார் நியமனம்!


இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக முன்னாள் தெங்கு பயிர்செய்கை சபையின் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான ஹிதாயத் சத்தார் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்.


யகலத்தன்னை முஸ்லீம் மகா வித்தியாலயம் மற்றும் கம்பளை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவருமான இவர் London Metropolitan பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டம் MBA (UK), இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் பட்டப் பின்படிப்பு PG Dip in Marketing (SL) மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் Dip in Marketing (SL) என்பனவற்றை நிறைவு செய்தவர் என்பதும் இலங்கை மற்றும் துபாய் நாடுகளில் சந்தைப்படுத்தல் மற்றும் வணிக முகாமையாளராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச அவர்கள் இதற்கான நியமனத்தை ஹிதாயத் சத்தார் அவர்களிடம் நேற்று வழங்கினார். 


ஹிதாயத் சத்தார் அவர்களின் கடந்த கால, மற்றும் எதிர்கால அரசியல் செயல்பாடுகளுக்கான அங்கீகாரமாக இந்நிகழ்வு பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.