கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் பாணந்துறையில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பில் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்து வந்ததுடன், கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல நபர்களிடம் 30 இலட்சத்துக்கும் அதிகமான பணம் வசூலித்து உள்ளார்.
அதன் பின்னர் சந்தேக நபர் மாயமான நிலையில், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
29 வயதான அட்டலுகம பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் பாணந்துறையில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பில் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்து வந்ததுடன், கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல நபர்களிடம் 30 இலட்சத்துக்கும் அதிகமான பணம் வசூலித்து உள்ளார்.
அதன் பின்னர் சந்தேக நபர் மாயமான நிலையில், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
29 வயதான அட்டலுகம பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன.