கனடாவில் வேலைவாய்ப்பு - பலரிடம் இலட்ச கணக்கில் பண மோசடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கனடாவில் வேலைவாய்ப்பு - பலரிடம் இலட்ச கணக்கில் பண மோசடி!

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் பாணந்துறையில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பில் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்து வந்ததுடன், கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல நபர்களிடம் 30 இலட்சத்துக்கும் அதிகமான பணம் வசூலித்து உள்ளார்.

அதன் பின்னர் சந்தேக நபர் மாயமான நிலையில், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

29 வயதான அட்டலுகம பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.