இலங்கையில் கலீபா ஆட்சியை கொண்டுவரும் நோக்கில் இளைஞர் குழு? பிள்ளையான் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கலீபா ஆட்சியை கொண்டுவரும் நோக்கில் இளைஞர் குழு? பிள்ளையான் தெரிவிப்பு!


வஹாப் வாதம் அல்லது கலிபா ஆட்சியை இலங்கையில் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கில் ஒரு சிறிய அளவிலான இளைஞர் குழுவொன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்புத் தஹரி போன்ற அமைப்புகள் மாற்றுப் பெயரில் இங்கு இயங்குவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனும் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (25) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்புவேளை பிரரேரணை மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வஹாப் வாதம் அல்லது கலிபா ஆட்சியை கொண்டுவர வேண்டுமென்ற நோக்கில் ஒரு சிறிய அளவிலான இளைஞர் குழுவொன்று நாட்டில் உருவாக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு உருவாகியுள்ள சிறிய கூட்டத்தை சரியாக கையாள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குள்ளது. அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் வெறுக்கத்தக்க சம்பவங்கள் இடம்பெற்று விடக்கூடாது.

தீவிரவாத அமைப்புகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களும், பங்களாதேஷில் ஜனார்த்துல் முஜார்தின் அமைப்பும், பாகிஸ்தானில் ரஸ்டர்ஐ தலிபா அமைப்பும் மலேசியாவில் இஸ்பூத் தஹரி அமைப்பும் இயங்குகின்றன. 

மலேசியாவில் உள்ள இஸ்பூத் தஹரி போன்ற அமைப்புகள் இலங்கையிலும் பெயர்மாற்றம் செய்யப்பட்டு இயங்குகிறன்றன. இதில் இலங்கையில் உள்ள படித்த முஸ்லிம்களும் உள்வாங்கப்பட்டு இயங்குகிறது. இந்த விடயம் மிகவும் கவனமாக இலங்கையில் கையாளப்பட வேண்டும். இக்குழுக்களில் நேரடியாகவோ மறைமுகமாகவே ஈர்ப்புச் செய்யப்பட்டவர்களை வெளியில் எடுக்க வேண்டும். 

இலங்கை என்பது பல இனம், மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இங்கு கலிபா ஆட்சியை ஏற்படுத்த முடியாது. இதற்கு எதிரான செயற்பாடுகளுக்காக ஜம்இய்யதுல் உலமா சபை போன்ற பொதுவான அமைப்புகள் முன்வர வேண்டும். ஆனால், இஸ்லாமிய அமைப்புகள் இப்பொழுதும் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஆகவே, பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் இந்த செயற்பாட்டின் பின்புலத்தை ஆராய்ந்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

-ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.