புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இனி இப்பரிசோதனை நடாத்தப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இனி இப்பரிசோதனை நடாத்தப்படும்!

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளையும் செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் சந்ரா ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இனிவரும் நாட்களில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னரே இந்தப் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், நாட்டில் பலருக்கு செவிப் புலன் பிரச்சினை காணப்படுகின்றது.

காதுகளில் படியும் கழிவுகளை வெளியேற்றுவதற்காக காது துடைப்பான், வாகன திறப்பான், சட்டைப் பின் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணமாக செவியினுள் காயங்கள் ஏற்படுவதுடன் நாளடைவில் செவிப்புலன் பிரச்சினை ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.