
இனிவரும் நாட்களில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னரே இந்தப் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், நாட்டில் பலருக்கு செவிப் புலன் பிரச்சினை காணப்படுகின்றது.
காதுகளில் படியும் கழிவுகளை வெளியேற்றுவதற்காக காது துடைப்பான், வாகன திறப்பான், சட்டைப் பின் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக செவியினுள் காயங்கள் ஏற்படுவதுடன் நாளடைவில் செவிப்புலன் பிரச்சினை ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.