அம்பாறையில் 8,000 அடி உயரத்திலிருந்து பரசூட் விபத்தின்போது ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அம்பாறையில் 8,000 அடி உயரத்திலிருந்து பரசூட் விபத்தின்போது ஒருவர் பலி!

பரசூட் பயிற்சியில் இடம்பெற்ற விபத்தின்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 34 வயதுடையவரெனவும் தெரியவந்துள்ளது.

அம்பாறை - உகண பகுதியில் உள்ள விமானப்படை முகாமில் முன்னெடுக்கப்பட்ட பரசூட் பயிற்சியின்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 34 வயதுடைய விமானப்படை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் இந்த சம்பம் இடம்பெற்றுள்ளதாகவும் 8 ஆயிரம் அடிக்கு மேல் பரசூட்டில் இருந்து விழும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

8 ஆயிரம் அடி உயரத்தில் இரு பரசூட் வீரர்களும் சிக்கிக்கொண்டதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.