இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
தொடம்கொடை பகுதியை சேர்ந்த 83 வயது ஆணொருவர், கொழும்பு 09ஐ சேர்ந்த பெண்ணொருவர், கொலன்னாவை பகுதியை சேர்ந்த 65 வயது ஆணொருவர், மற்றும் பத்தரமுல்லை பகுதியை சேர்ந்த 77 வயது பெண்ணொருவருமே இவ்வாறு பதிவாகினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 497 ஆக அதிகரித்துள்ளது.