VIDEO : நைஜீரியா: பள்ளி மாணவிகள் 300 பேர் கடத்தல்; அதிர்ச்சியில் பெற்றோர்கள்! - என்ன நடக்கிறது?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : நைஜீரியா: பள்ளி மாணவிகள் 300 பேர் கடத்தல்; அதிர்ச்சியில் பெற்றோர்கள்! - என்ன நடக்கிறது?

நைஜீரியாவின் நைஜா் மாகாணப் பள்ளியிலிருந்து ஆயுதக் கும்பலால் இரு வாரங்களுக்கு முன்னா் கடத்திச் செல்லப்பட்ட அனைத்து 279 பேர்களும் விடுவிக்கப்பட்டனர். 

இதுகுறித்து அந்த மாகாண ஆளுநா் மேரி நோயல்-பொ்ஜே கூறுகையில், ‘ககாரா அரசு அறிவியல் பள்ளியிலிருந்து இரு வாரங்களுக்கு முன்னா் கடத்தப்பட்ட அனைத்து மாணவர்களும் விடுவிக்கப்பட்டனா்’ என்று தெரிவித்தாா்.

நைஜீரியாவில் பள்ளி மாணவா்கள் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடா்கதையாகியுள்ளன.

முன்னதாக, காட்சினா மாகாணம், கங்காரா நகரிலுள்ள அரசு அறிவியல் நடுநிலைப் பள்ளிக்கு ஏகே 47 ரகத் துப்பாக்கிகளுடன் கடந்த டிசம்பா் மாதம் வந்த கும்பல், அங்கிருந்து 344 மாணவா்களை கடத்திச் சென்றது. பின்னா் அரசு நடத்திய தீவிர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மாணவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு போகோ ஹராம் பயங்கரவாதிகளால் 276 பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டது உலக அளவில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. அவா்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.