முழு விபரம் : இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 197 தொற்றாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முழு விபரம் : இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 197 தொற்றாளர்கள்!

இலங்கையில், நேற்றைய தினம் (21) கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 322 பேரில் 197 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 58 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17 பேர், இரத் தினபுரி மாவட்டத்தில் 10 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 08 பேர், காலி மாவட்டத்தில் 07 பேர் , கிளிநொச்சி மாவட்டங்களில் 07 பேர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 06 பேர், களுத்துறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் 05 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 04 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குருணாகல், மட்டக்களப்பு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பாறை, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தலா 02 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

கண்டி , முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 12 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொ விட-19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.