முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனக்கு ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈடு தர வேண்டும் என கோரிக்கை முன்வைத்து தனது வழக்கறிஞர் ஊடாக உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் பேரணி ஒன்றில் சரத் பொன்சேகா வெளியிட்ட அறிக்கையில் முரளிதரன் தொடர்பாக அவதூறு கூறப்பட்டதற்காகவே இந்த நட்டஈடு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.