நாட்டில் இன்றைய தினம் 02 கொரோனா மரணங்கள் பதிவாகின.
கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 65 வயது பெண்ணொருவர் மற்றும்
கொலன்னாவை பகுதியை சேர்ந்த 76 வயது ஆணொருவரே இவ்வாறு பலியாகினர்.
அதன்படி நாட்டில் இதுவரை ஏற்பட்ட மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்தது.