கொரோனா - இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனம் (SLBC) முடங்கும் தருவாயில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா - இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனம் (SLBC) முடங்கும் தருவாயில்!

இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் செய்திப் பிரிவு மூடப்படுவதற்கான நிலைமை ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் சிங்கள பிரிவில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொவிட் தொற்ற உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் கடமையாற்றும் ஊழியர்களை கட்டம் கட்டமாக பணிக்கு அமர்த்துமாறு சுகாதார பிரிவினர் ஆலோசனை வழங்கியிருந்த போதிலும், நிர்வாகத்தினர் அதனை கடைபிடிக்கவில்லை என அறிய முடிகின்றது.

இந்த நிலையில், கொவிட் தொற்றுக்குள்ளான குறித்த ஊடகவியலாளர் கடந்த வியாழக்கிழமை கடமைகளுக்காக சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக குறித்த ஊடகவியலாளர் கடமைக்கு சமூகமளிக்கும் போது, அவருக்கு காய்ச்சல் நிலைமை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ, அண்மையில் ஒலிபரப்பு கூட்டுதாபனத்திற்கு சென்று நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் ஊடாகவே, குறித்த ஊடகவியலாளருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

குறித்த ஊடகவியலாளருக்கு காய்ச்சல் காணப்படுவதாக அறிய முடிகின்றது.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் கொவிட் தொற்று கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த உயர் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்ட போதிலும், நிறுவனத்திற்குள் உரிய சுகாதார நடைமுறைகள் பேணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, சுகாதார நடைமுறைகளின் இன்றி, ஊழியர்களை கடமைகளுக்காக வெளியில் செல்ல நிறுவனம் வலியுறுத்துவதாக ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் ஊழியர்கள் அங்கலாய்கின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.