File Photo |
கைது செய்யப்பட்ட 55-60 வயதுடைய சந்தேக நபர்கள் இன்று (2) களுத்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
அலுத்கம பொலிசாரிஜ் ஓ.ஐ.சியின் இடது கையில் காயங்களுடன் அலுத்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒ.பி.டி.யில் (வெளி நோயாளர் பிரிவு) சிகிச்சை பெற்ற பின்னர் மருத்துவமனையை விட்டு வெளியேறிதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வீட்டுடன் காணப்படும் நிலம் தொடர்பான வழக்கில் களுத்துறை மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற நீண்ட விசாரணைகளுக்கு பின்னர், அலுத்கம பொலிசார் நீதிமன்ற அதிகாரிகளுடன் குறித்த வீட்டிற்குச் சென்றபோது உடைமைகளை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் கலகத்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.
நீதித்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு, நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் களுத்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.