மருத்துவமனைக்கு பூட்டு - அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மருத்துவமனைக்கு பூட்டு - அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை!!

பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனையில் கொரோனா தொற்றாளர் ஒருவருக்கு நோயாளிக்கு சிகிச்சையளிக்கப்பட்டதால் பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனையின் இரண்டு நோயாளிகள், மூன்று செவிலியர்கள் மற்றும் ஆறு இளைய பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய வைத்திய அதிகாரி ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

கடந்த 31 ஆம் திகதி சிகிச்சைக்காக வந்த குறித்த நீரிழ்வு நோயாளி டிக்கோயா அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் விரைவான ஆன்டிஜென் பரிசோதனையிலிருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொற்றுக்குள்ளான நபரின் மருமகள் ஹட்டன் போஸ்கோ கல்லூரியில் ஆசிரியராக கடமை புரிகின்றார்.

தற்போது, ​​பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனையில் புதிதாக நோயாளிகள் அனுமதிக்கப்படுவது இடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பொகவந்தலாவ சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மருத்துவமனை மீண்டும் திறக்கப்படும் என்று பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனையின் மாவட்ட மருத்துவ அலுவலர் ஏ.எஸ்.கே.ஜெயசூரியா தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.