நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் முன்னுரிமை உடைய தரப்பினராக கருதப்படக்கூடாது என அரச மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட குழுவினருக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய தரப்பினர் குறித்து உலக சுகாதார நிறுவனத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள முன்னுரிமை பட்டியலில் அரசியல்வாதிகள் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய தரப்பினர் குறித்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுகள் கவலை தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.