தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் உலக சுகாதார நிறுவனத்தை பின்பற்ற வேண்டும்! CMLSSL

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் உலக சுகாதார நிறுவனத்தை பின்பற்ற வேண்டும்! CMLSSL

நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் முன்னுரிமை உடைய தரப்பினராக கருதப்படக்கூடாது என அரச மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட குழுவினருக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய தரப்பினர் குறித்து உலக சுகாதார நிறுவனத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள முன்னுரிமை பட்டியலில் அரசியல்வாதிகள் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய தரப்பினர் குறித்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுகள் கவலை தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.