மஸ்கெலியாவில் உள்ள ஸ்டாஸ்பி தோட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தின் தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்
அதன்படி, குறித்த கொரோனா பாதிக்கப்பட்ட மாணவன் படிக்கும் மஸ்கெலியா தமிழ் மகா வித்தியாலய பாடசாலையினை இன்று முதல் (01) தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி டி.சந்திரராஜன் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் நோர்வூட் பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார், பின்னர் அதன் 35 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குறித்த மூன்று பேரின் வீட்டிற்கு கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர் வந்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது என்று மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி மேலும் தெரிவித்தார்.