ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்த இம்ரான் கான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்த இம்ரான் கான்!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியமைக்கு இலங்கை அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் இம்ரான் கான், தனது டுவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் இவ்விடயம் தொடர்பாக தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வு மேலும் வலுவடைவதற்கு இந்த விடயம் ஏற்புடையதாக அமைந்துள்ளது.

அந்தவகையில் இவ்விடயத்துத்துக்கு இலங்கையின் தலைமைக்கு இபாகிஸ்தான் நன்றி தெரிவிக்கிறது’ என ட்விட் செய்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.