பொருளாதாரத் தடை வராத விதத்தில் ஜெனிவா சவாலை எதிர்கொள்வோம்! வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொருளாதாரத் தடை வராத விதத்தில் ஜெனிவா சவாலை எதிர்கொள்வோம்! வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படாத விதத்தில் செயற்படக்கூடிய ஆற்றல் தற்போதைய அரசுக்கு இருக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

'ஜெனிவா விவகாரத்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் வரக்கூடும். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் வர்த்தகர்கள் மத்தியில் இருக்கின்றது. இது தொடர்பில் தங்கள் கருத்து என்ன என்று?' எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கையின் பொருளாதாரத்தில் கைவைப்பதற்கு சில மேற்குலக நாடுகள் முயற்சிக்கின்றன. அவ்வாறான நாடுகளுக்கும், அங்குள்ள அமைப்புகளுக்கும் யதார்த்த நிலைமை குறித்து எடுத்துரைக்கப்பட்டும். அத்துடன், அவர்கள் அறிந்திராத பல தகவல்களை முன்வைப்பதற்கு இலங்கையால் முடியுமாக இருக்கின்றது.

இலங்கையில் முற்போக்கு சக்தியொன்று நாட்டை ஆளும் பட்சத்தில் தமது நாட்டுக்கு எதிரானவற்றை தோற்கடிப்பதற்கே நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எனவேதான், எமக்கு ஏதோவொரு விதத்தில் அழுத்தங்களை கொடுப்பதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.

பொருளாதாரத்தடை, பொருளார வீழ்ச்சி ஆகியன குறித்து அறிவிப்புகள் வெளி வந்தாலும் அவை நடைமுறைக்கு வராத வகையில் பார்த்துக்கொள்ளக்கூடிய செயற்படக்கூடிய ஆற்றல் இலங்கை அரசுக்கு இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.