தமிழ் - நேற்றைய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான அறிக்கையின் முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தமிழ் - நேற்றைய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான அறிக்கையின் முழு விபரம்!

corona update sri lanka
இன்று (24) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 492 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 103 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 88 பேரும் கண்டி மாவட்டத்தில் 29 நபர்களும் அம்பாறை மாவட்டத்தில் 53 பேரும் பதுளை மாவட்டத்தில் மூவரும் புத்தளம் மாவட்டத்தில் இருவரும் நுவரெலியா மாவட்டத்தில் 48 பேரும் யாழ். மாவட்டத்தில் 32 நபர்களும் மன்னார் மாவட்டத்தில் இருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 24 பேரும் புதிதாக தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கோட்டை பகுதியில் 37 பேருக்கும் நாரஹேன்பிட்ட பகுதியில் 11 பேருக்கும் வௌ்ளவத்தை பிரதேசத்தில் நால்வருக்கும் பொரளையில் மூவருக்கும் கிரேண்ட்பாஸ் பகுதியில் நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா – களனி பகுதியில் 14 பேரும் நீர்கொழும்பு பிரதேசத்தில் மூவரும் வத்தளை பிரதேசத்தில் நால்வரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

பொகவந்தலாவை பகுதியில் 23 பேருக்கும் லிந்துலை பகுதியில் 14 பேருக்கும் நுவரெலியா பிரதேசத்தில் 11 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் ஒருவருக்கும் யாழ்ப்பாணத்தில் நால்வருக்கும் கோப்பாய் பகுதியில் ஒருவருக்கும் பருத்தித்துறை பகுதியில் 26 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை பிரதேசத்தில் 24 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, வவுனியா, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்கள் பதிவாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதனிடையே, வவுனியா, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்கள் பதிவாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


இன்று (24) காலை வரையில் நாட்டில் 81,009 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 75,842 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.


நேற்றைய தினம் (23) 3 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.


நாட்டில் நேற்றைய தினம் 11,222 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.