கடந்த 24 நாட்களில் இலங்கையில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடந்த 24 நாட்களில் இலங்கையில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் முழு விபரம்!

நாட்டில் கடந்த 24 நாட்களில் இலங்கையில் 3 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 28ஆம் திகதி நன்கொடையாக நாட்டுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, நேற்று (23) மாத்திரம் நாடளாவிய ரீதியில் 12 ஆயிரத்து 555 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 66 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கடந்த 5 நாட்களில் மாத்திரம், 1 இலட்சத்து 33 ஆயிரத்து 435 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 13.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கொள்வனவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.