பாடசாலை மாணவர்களும் தொலைபேசி பயன்பாடும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை மாணவர்களும் தொலைபேசி பயன்பாடும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


தற்போது பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளதால் அவர்கள் அதற்கு அடியமையாவதற்கான நிலைமை காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஆயிஷா லொகுபாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.


இந்நிலைமையால் மாணவர்களின் மூளை செல்கள் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கொரோனா பரவலுக்கு மத்தியில் கற்றல் நடவடிக்கைகள் தற்போது இணையளத்தளம் ஊடாக இடம்பெற்று வருவதால் மாணவர்களுக்கு இடையில் கையடக்க தொலைபேசிகள் பிரபலமான கருவியாக மாறியுள்ளன.


இந்நிலையில் கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் கையடக்க தொலைபேசிகளை பிள்ளைகளிடம் இருந்து தூரமாக வைப்பதற்கு பெற்றோர்கள் செயற்பட வேண்டும்.


அத்துடன் பிள்ளைகள் இணையளத்தளங்களை பயன்படுத்தும் போதும் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஆயிஷா லொகுபாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.