யாழ். பருத்தித்துறையில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு; சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொதுமக்கள் சிலர் இடையில் மோதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழ். பருத்தித்துறையில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு; சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொதுமக்கள் சிலர் இடையில் மோதல்!


யாழ். பருத்தித்துறையில் கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வீடொன்றை சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைத்த நிலையில் ஏற்பட்ட முறுகலில் இரண்டு பொதுமகன்களும் சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளனர்.


சம்பவத்தில் காயமடைந்த ஆண் குடும்பத்தலைவர் ஒருவரும் குடும்பப்பெண் ஒருவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வெட்டுக்காயத்துக்கு உள்ளாகிய சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவம் இன்று (04) அதிகாலை பருத்தித்துறை - தும்பளை எல்லை வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த வீட்டுக்குச் சென்ற சிறப்பு அதிரடிப் படையினர் கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தாம் சோதனை நடத்தவுள்ளதாக தெரிவித்த போது வீட்டின் உரிமையாளர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூற்ப்படுகின்றது.


இதனையடுத்து சிறப்பு அதிரடிப் படையினருக்கும் அந்தக் குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் சிறப்பு அதிரடிப் படையினர் வான் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.


இதன்போது தமது உத்தியோகத்தர் மீது வாளால் வெட்டிய ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன் தமது வாகனத்துக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் பருத்தித்துறை பொலிஸில் தெரிவித்துள்ளனர்.


அத்துடன் சிறப்பு அதிரடிப்படையினரின் தாக்குதலில் காயங்களுக்குள்ளானதாக குடும்பத்தலைவரும் குடும்பப் பெண் ஒருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டைச் சேர்ந்த இருவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.