கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

புதிதாக அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் விசேட நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கடந்த 3, 4 தினங்களாக நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி இறுதி மற்றும் பெப்ரவரி மாதங்களின் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் 6.5 வீதமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டபோதும் தற்போது அந்த எண்ணிக்கை 4 அல்லது 4.5 வீதமாக குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் கொழும்பு மாவட்டம் மற்றும் கொழும்பு நகரில் பெருமளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர், எனினும் தற்போது அந்த நிலைமையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது மக்கள் பொறுப்புடன் செயற்படுவதால், நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.