நுவரெலியாவில் விரைவில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நுவரெலியாவில் விரைவில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!

Nuwara eliya road

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய சுற்றுலாத் தளமாக நுவரெலியா மாற்றமடைய உள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


அந்த வகையில் நுவரெலியாவை விரைவில் சுற்றுலா வலயமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


நானு-ஓயாவில் இருந்து நுவரெலியா வரையில் கேபிள் கார் திட்டத்திற்காக 52 மில்லியன் யூரோ ஒதுக்கிடப்பட்டுள்ளதுடன்,


அந்த திட்டத்தை பீதுருதாலகால மலை வரையில் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.


அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 318 சுற்றுலாத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.