கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணித்த முதல் மருத்துவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணித்த முதல் மருத்துவர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 32 வயதான இளம் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த வைத்தியர் ஒருவர் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (2) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த வைத்தியர் 32 வயதுடைய, கயான் தன்தநாராயன ஆவார்.

இவர் ராகம வைத்தியசாலையில் கடமையாற்றிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் உயிரிழந்த முதல் வைத்தியர் இவராவார்.

இதனை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.